கேஸ் சிபிசிஐடி கைக்கு போயிருச்சு.. அரசியல் வட்டாரங்களை அலறவிட்ட ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு…. சிக்கப்போகும் ‘பெரிய தலைகள்’ யார்…?

Spread the love

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது, தொடக்கத்தில் ஒரு சாதாரண திருட்டு சம்பவமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அவற்றில் மின்வாரியத்தின் முக்கிய நிர்வாக தகவல்கள், ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப தரவுகள் இருந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் அரசியல் ரீதியாக கடுமையான விவாதங்களையும் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

இதற்கிடையில், சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. மின்வாரிய அலுவலகத்தில் கணினி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த அரக்கோணத்தைச் சேர்ந்த 31 வயதான கோபிநாத் என்பவரே இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் திருடிய ஹார்டு டிஸ்க்குகளை ஃபார்மேட் செய்து, பெங்களூருவில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் தலா 2,500 ரூபாய்க்கு விற்றுள்ளார். இதையடுத்து, தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்து சென்று, 34 ஹார்டு டிஸ்க்குகளையும் மீட்டதோடு, கோபிநாத் மற்றும் அவற்றை வாங்கிய நிறுவன உரிமையாளர் முரளி மனோகர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், இந்த வழக்கில் வெறும் பணத்திற்காக மட்டுமே திருட்டு நடந்ததா அல்லது முக்கிய ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் திட்டமிட்ட சதி ஏதேனும் பின்னணியில் உள்ளதா என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் வலுவாக முன்வைத்துள்ளன. முக்கிய தரவுகளை வெளியே கொண்டு செல்வதற்காக யாராவது இவரை இயக்கினார்களா என்ற கோணத்திலும் சந்தேகம் எழுப்பப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. இதனால், இந்த வழக்கின் தீவிரத்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, சென்னை காவல்துறை இதனை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்தது.

தற்போது டிஜிபி அலுவலகத்தின் ஒப்புதலுடன் இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் விரைவில் வழக்கின் முழு ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு தங்களின் விசாரணையைத் தொடங்கவுள்ளனர். ஹார்டு டிஸ்க்குகளில் இருந்த தரவுகளின் உண்மைத் தன்மை என்ன, இந்த திருட்டின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் யார் மற்றும் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது போன்ற பல மர்மங்களுக்கு சிபிசிஐடி-யின் அதிரடி விசாரணையில் விரைவில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“சாக்கடையில் மிதந்த சடலம்…” பிறந்தநாள் பார்ட்டியில் நுழைந்த போலீஸ்…. வாலிபரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…

4 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… பேல் பூரி வியாபாரியை அடித்து நொறுக்கி… பொரியை ரோட்டில் கொட்டிய கொடூரம்… பீகார் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!

பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…

5 minutes ago

“நான் ஆறுதலா இருப்பேன்…” நகை கடை அதிபரின் மகளுடன் நட்பு… மீண்டும் வந்த கணவர் கேட்ட ஒற்றை கேள்வி… போலீஸ் ஸ்டேஷனில் அழுது புலம்பிய பெண்…. பகீர் சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…

12 minutes ago

ஐயோ… இஸ்ரேல் தாக்கிய கட்டிடம்… திடீரென இடிந்து 5 குழந்தைகள் உட்பட… 20 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய பகீர் சோகம்…!!

காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…

13 minutes ago

“‘என் மகனை உண்மையா காதலிச்சா செத்து போடி…” 17 வயது பள்ளி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய கொடூர தாய்… வீட்டில் சிக்கிய CCTV ஆதாரம்…. பகீர் பின்னணி…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…

19 minutes ago

ஐயோ கொடுமையே… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து… முன்னாள் ராணுவ வீரர், மகள் வெட்டிக்கொலை… சொத்துத் தகராறில் உறவினர்கள் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…

26 minutes ago