பறவை காய்ச்சல் பீதி… “ஆஃப் பாயில்” சாப்பிடக்கூடாதா?… அமைச்சர் சொன்ன ‘பகீர்’ காரணமும்.. அந்த டிவிஸ்ட்டும்… தமிழக மக்களுக்கு அலெர்ட்….!

Spread the love

தமிழகத்தில் பறவை காய்ச்சல் குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில், மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருந்த ‘ஆஃப் பாயில்’ விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தற்போது விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் காகங்கள் கொத்து கொத்தாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவை ‘H5N1’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், அப்போது ‘ஆஃப் பாயில்’ சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக அமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து, முட்டை பிரியர்கள் பலரும் ஆஃப் பாயில் முட்டையைச் சாப்பிடக் கூடாதோ என்ற குழப்பத்தில் ஆழ்ந்தனர். இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது. இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், தான் முட்டையைப் பற்றி குறிப்பிடவில்லை என்றும், அரைவேக்காடாகச் சமைக்கப்பட்ட சிக்கன்  பற்றியே தான் அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார். பொதுமக்களிடையே ஏற்பட்ட தவறான புரிதலைச் சுட்டிக்காட்டிய அவர், கோழி இறைச்சியைச் சமைக்கும் போது அதை முழுமையாக வேகவைத்து (Full boil) உண்ண வேண்டும் என்பதையே வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.

பறவை காய்ச்சல் பரவல் குறித்துப் பேசிய அமைச்சர், இந்தப் பாதிப்பு தற்போது பறவைகளிடையே மட்டுமே காணப்படுவதாகவும், இதுவரை தமிழகத்தில் மனிதர்களுக்குப் பரவவில்லை என்றும் கூறினார். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறந்த பறவைகளைக் கண்டால் கைகளால் தொட வேண்டாம் என்றும், அவற்றை முறையாகக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கோழி இறைச்சியை உண்பவர்கள் நோய் எதிர்ப்புத் திறனை உறுதி செய்யும் வகையில் அதனைத் தீயாக வேகவைத்து உண்பது பாதுகாப்பானது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அமைச்சரின் இந்தத் தெளிவான விளக்கம் முட்டை மற்றும் சிக்கன் பிரியர்களிடையே நிலவி வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், காகங்கள் அல்லது கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

30 minutes ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

39 minutes ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

42 minutes ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

1 மணத்தியாலம் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

1 மணத்தியாலம் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

1 மணத்தியாலம் ago