CINEMA
தயாரிப்பாளர் RB சௌத்ரி கேட்டு ok பண்ண எல்லா கதையும் ஹிட்டு… ஆனா விஜய் ok பண்ண கதை ப்ளாப்.. பிரபலம் பகிர்ந்த சுவாரசியம்..
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர் பி சௌத்ரி. அவர் படங்களின் தனிச்சிறப்பே புதுமுக இயக்குனர்களைக் கொண்டு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து சூப்பர் ஹிட் கொடுத்ததுதான். இதுவரை அவர் 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுபோல 95 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தன்னுடைய நிறுவனத்தின் 100 ஆவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் அது நடப்பதற்கான சூழல் இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் விஜய் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து விட்டதால் இன்னும் ஒரே ஒரு படம்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சியில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அவரின் முதல் ஹிட் படமான பூவே உனக்காக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் லவ் டுடே, துள்ளாத மனமும், ஷாஜகான் மற்றும் திருப்பாச்சி என இவர்கள் இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. கடைசியாக 2014 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் உருவான ஜில்லா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.
இதுபற்றி பேசியுள்ள திரையரங்க உரிமையாளரும், ஆர் பி சௌத்ரியின் நெருங்கிய நண்பருமான திருப்பூர் சுப்ரமண்யம் “விஜய்க்கா ஆர் பி சௌத்ரி கதை கேட்டு ஓகே பண்ண அனைத்து படமும் ஹிட்டு. ஆனால் விஜய் கதை கேட்டு ஓகே பண்ணி சௌத்ரி சாரிடம் அனுப்பிய ஜில்லா படம் தோல்விப் படமாக அமைந்தது. அதனால் ஹீரோக்களை நம்பி இயக்குனர்கள் செல்வதை விட்டு தயாரிப்பாளர்களிடம் செல்லவேண்டும்” என்று பேசியுள்ளார்.