நம் வீட்டில் வாங்கும் பழங்கள் காய்கறிகள் அனைத்தையும் பிரிட்ஜில் போட்டு வைப்போம் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒரு வாரம் பாதுகாக்க உதவும் எளிய நடைமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பழங்கள் மற்றும் காய்கறிகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும். வாழைப்பழம், அவகேடா போன்ற பழங்கள் சீக்கிரம் பழுத்து விடும் என்பதால் அவற்றை தனியாக வைக்க வேண்டும். காய்கறிகளையும் தனியாக பிரித்து வைக்க வேண்டும். வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை வெளியில் வைக்க வேண்டும்.
காய்கறிகளை கவர் அல்லது டப்பாக்களில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கியவுடன் கழுவுவது ஈரப்பதத்தை அதிகரிக்கும். இது கெட்டுப் போவதை துரிதப்படுத்தும். எனவே பயன்படுத்துவதற்கு முன்பு மட்டுமே கழுவுவது நல்லது. அதே நேரம் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வது முக்கியம் என்பதால் பேப்பர் அல்லது துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாம்.
அதிக ஈரப்பதம் இருந்தால் துடைத்து காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சேமித்து வைத்திருக்கும் காய்கறி மற்றும் பழங்களை அடிக்கடி சரிபார்த்து கெட்டுப் போனதை அகற்றி விட வேண்டும். ஈரப்பதத்தை நீக்குவது கெட்டுப் போவதை குறைக்கிறது. சீல் வைக்கப்பட்ட கவரில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும். வினிகர் அல்லது உப்பு நீர் கொண்ட பாதுகாப்பு நீண்ட கால பாதுகாப்பு மட்டுமில்லாமல் சுவையையும் சேர்கிறது. வெள்ளரி, கேரட், பீட்ரூட் ஆகியவற்றிற்கு இந்த முறை ஏற்றது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…