உங்களுக்கு “மருக்கள்” இருக்கா…? வீட்டில் உள்ள பொருள் போதும்… வலியே இல்லாம ஈஸியா உதிரும்…!!

By Devi Ramu on மார்கழி 19, 2025

Spread the love

முகம், கை மற்றும் அக்குள்களில் தோன்றும் மருக்கள் பார்ப்பதற்கு அழகைக் கெடுப்பதுடன் பலருக்கு மன உளைச்சலையும் தருகின்றன. இவற்றை நீக்க அதிக பணம் செலவழித்து மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை; நம் வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு நிரந்தரமாகப் போக்க முடியும்.

பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா ஆகிய மூன்றையும் கலந்து ஒரு கலவையைத் தயார் செய்ய வேண்டும். முதலில் ஆறேழு பூண்டுப் பற்களை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் சோடா உப்பையும் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

   

இந்தக் கலவையை மருக்கள் உள்ள இடத்தில் தடவி ஒரு மணி நேரம் வரை காயவிட வேண்டும். அதன் பிறகு சுத்தமான நீரால் அந்த இடத்தைக் கழுவி வரலாம். தொடர்ந்து நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை இப்படிச் செய்து வந்தால், சருமத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மருக்கள் எந்த வலியும் இல்லாமல் தானாகவே உதிர்ந்துவிடும்.

   

பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் மருக்களை வேரோடு அழிப்பதுடன் மீண்டும் அந்த இடத்தில் அவை வளராமல் தடுக்கவும் உதவுகின்றன. இந்த எளிய இயற்கை வைத்தியம் மூலம் எந்தவிதப் பக்கவிளைவுகளும் இன்றி மென்மையான சருமத்தை மீண்டும் பெற முடியும்.