“காலம் எனக்கு ஆப்பு வச்சிருச்சு…!” – அந்த ஒரு நபர் செய்த செயலால் உடைந்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி…!!

By Swetha on ஆனி 19, 2026

Spread the love

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி, சமீபத்தில் தனக்கு நேர்ந்த ஒரு பெரும் சர்ச்சை மற்றும் மனவேதனை குறித்துப் பகிர்ந்துள்ளார். ஒரு மேடை நிகழ்ச்சியில் தான் பாடிய கிராமிய பாடலை, தன்னுடைய தங்கை பாடியதாகக் கூறியதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவியதே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தான் அப்படி எந்தவொரு கருத்தையும் கூறாத நிலையிலும், சிலர் திட்டமிட்டு இந்த வதந்தியைப் பரப்பியதாக ராஜலட்சுமி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த வதந்தியைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த ஒருவர் தன்னை பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ராஜலட்சுமியைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர் ராஜலட்சுமியின் தரப்பு விளக்கத்தைக் கேட்க மறுத்ததுடன், “நீங்கள் பொய் சொல்லிப் பிரபலமாவதற்காக இப்படிச் செய்துள்ளீர்கள், இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது, உங்களைப் பற்றிச் செய்தி வெளியிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். அவர் மட்டுமின்றி, சில தனியார் செய்தித் தொலைக்காட்சிகளும் அடுத்த நாள் காலையில் ராஜலட்சுமியைக் குற்றம் சாட்டும் வகையில் செய்திகளை ஒளிபரப்பியுள்ளன. இது குறித்து அந்தச் சேனல்களைத் தொடர்பு கொண்டு அவர் விளக்கம் கேட்டபோதும், அவரிடமும் “ஆதாரம் இருக்கிறது” என்றே கூறி அவரது பேச்சைக் கேட்க மறுத்துள்ளனர்.

   

உண்மை என்னவென்று நிரூபிக்க முடியாமலும், ஊடகங்களின் தொடர் குற்றச்சாட்டுகளாலும் ராஜலட்சுமி கடுமையான மனவேதனையில் தவித்து வந்துள்ளார். அந்த இக்கட்டான சூழ்நிலையில், முன்பின் தெரியாத நபர் ஒருவர் அவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்து உதவி செய்துள்ளார். ராஜலட்சுமி பேசிய அந்த முழு மேடை நிகழ்ச்சியையும் தாங்கள் வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றியுள்ளதாகக் கூறிய அந்த நபர், அந்த வீடியோ ஆதாரத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். அந்த நேரத்தில் தனக்குக் கடவுள் போல வந்து உதவிய அந்த வீடியோ ஆதாரத்தின் மூலமே, தன் மீதான அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்ததாக ராஜலட்சுமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.