ஜோதிட சாஸ்திரத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் ஒரு மிக அரிதான நிகழ்வாக, கும்ப ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் ஒன்றிணையும் ‘திரிகிரக யோகம்’ 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கும்ப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ராகு மற்றும் புதன் ஆகிய கிரகங்களுடன், தற்போது சுக்கிர பகவானும் இணைந்துள்ளார். இந்த அபூர்வ கிரக சேர்க்கையானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களையும் அள்ளித் தரப்போகிறது.
மேஷ ராசியினருக்கு இந்தத் திரிகிரக யோகம் ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. குறிப்பாக பொருளாதார ரீதியாகப் பெரும் முன்னேற்றம் ஏற்படும்; நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். ஆடம்பர வசதிகள் பெருகி, புதிய வண்டி மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மேலும், திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பும், மாணவர்களுக்குப் படிப்பில் மேன்மையான நிலையும் கிட்டும்.
ரிஷப ராசியினரைப் பொறுத்தவரை, இந்த கிரகங்களின் சேர்க்கை தன்னம்பிக்கையையும் சமூக அந்தஸ்தையும் உயர்த்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதோடு, வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் ஈட்டும் வாய்ப்புகள் அமையும். மனக்கவலைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படுவதால் அவர்கள் அனைத்துக் காரியங்களிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றிகாண்பார்கள்.
துலாம் ராசியினருக்கு இது ஒரு ‘பொற்காலமாக’ அமையும் என்று ஜோதிட ரீதியாகக் கணிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் நிதித் துறையில் இருப்பவர்களுக்கு இந்த யோகம் பெரும் வெற்றியைத் தேடித்தரும். வேலையில்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதோடு, தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி லாபம் பெருகும். ஒட்டுமொத்தமாக இந்த மூன்று ராசிகளுக்கும் 2026-ஆம் ஆண்டின் இந்த கிரகப் பெயர்ச்சி பெரும் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய ஜாக்பாட்டாக அமையப்போகிறது.
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…
கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…
கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…