பதவியேற்ற 3 நாட்களில் 3 தோல்வி… லிஸ்ட் போட்ட திமுக.. செம அப்செட்டில் விஜய்..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற மூன்றே நாட்களில் எடுத்த மூன்று முக்கிய நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக திமுக விமர்சித்துள்ளது. முதலாவதாக, பதவியேற்பு விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டாவதாக, தவெக அரசை விமர்சித்து சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் வெளியான பதிவுகளை நீக்கக் கோரி சைபர் கிரைம் அனுப்பிய நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மூன்றாவதாக, ஜோதிடர் ரதன் பண்டிட் என்பவரைச் சிறப்பு அதிகாரியாக நியமித்து, பின்னர் அந்த உத்தரவு அவசரமாகத் திரும்பப் பெறப்பட்டதையும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. நிர்வாக ரீதியிலான இந்த மூன்று தவறான முடிவுகளும், தவெக ஆட்சிக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய தோல்வியையும் பின்னடைவையும் தந்துள்ளதாக திமுக தனது கடுமையான விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.