ரயிலில் பெண்களுக்கு அச்சுறுத்தல்.. இரவு 10 மணிக்கு முன்பே பேசக்கூடாது என மிரட்டல்..? வைரல் வீடியோவின் பின்னணி… கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!

By Soundarya on தை 20, 2026

Spread the love
மேற்கு வங்காளத்தின் சிலிகுரியிலிருந்து அசாமுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த ஐந்து இளம் பெண்கள், சக பயணி ஒருவரால் பொது இடத்தில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இரவு 10 மணிக்கும் முன்பாக, அந்தப் பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறி மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அங்கே நோயாளி ஒருவர் இருப்பதாகக் கூறி வாக்குவாதம் செய்த அவர்கள், உண்மையில் அங்கு யாரும் இல்லாத நிலையிலும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

   

A post shared by jerifa ahmed (@unfilteredjerifa)

இது குறித்து ஜெரிஃபா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@unfilteredjerifa) வெளியிட்டுள்ள வீடியோவில், தாங்கள் நாகரீகமாகப் பதிலளித்தபோதும் அந்த நபர் தங்களை மீண்டும் மீண்டும் முறைத்துப் பார்த்து சங்கடப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில் பெண்களிடம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தப் பதிவைப் பகிர்வதாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி 57,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.