பிப்ரவரி 4-ம் தேதி குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது, பிரதமர் உரையாற்ற இருந்த நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் அவரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு அன்றைய தினம் அவைக்கு வரவேண்டாம் எனச் சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமருக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். இருப்பினும், இது ஒரு “பொய்” என மறுத்த காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, பிரதமர் பெண் எம்பிக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பயந்து சபாநாயகர் பின்னால் ஒளிந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கையை முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பிப்ரவரி 10-ம் தேதி வெளியிட்டார்.
<
This is the illegal video clip taken by a Congress MP when 20-25 Congress MPs entered the Chamber of Hon’ble Speaker, abused him and threatened Honb’le Prime Minister. Our party believes in debate & discussion and never encourage MPs to threaten physically. https://t.co/bezzALc7D3 pic.twitter.com/iM0a50Z4rg
— Kiren Rijiju (@KirenRijiju) February 12, 2026
/div>
இந்த விவகாரத்தின் அடுத்தகட்டமாக, 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாகக் கிரண் ரிஜிஜு இன்று (பிப்ரவரி 12) குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் எம்பி ஒருவரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவை தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். சபாநாயகரின் அறையில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்ததாகவும், அவர்கள் இத்தகைய அநாகரிகமான நடத்தையை ஊக்கப்படுத்தியதாகவும் ரிஜிஜு விமர்சித்துள்ளார். இந்தச் சம்பவங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பைக் குலைப்பதாக பாஜக தரப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி நிலவி வருகிறது.
