தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஆன்மீகப் பயணத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, தனது அடுத்த திட்டமாக மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வதற்காக இன்று (ஏப்ரல் 29) நீலாங்கரையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சீரடி விமான நிலையத்திற்குச் செல்லும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தலம் சென்று பிரார்த்தனை செய்யத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் களத்தில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள விஜய், முடிவுகள் வருவதற்கு முன்னதாகத் தொடர்ந்து முக்கியக் கோவில்களில் வழிபாடு நடத்தி வருவது அவரது தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…