Categories: சினிமா

MGR மறைவிற்கு வராத நம்பியார்… கட்டுக்கதை கட்டிய ரசிகர்கள்…

Spread the love

MGR தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவி வகித்தவரும் ஆவார். 1977 வது ஆண்டு முதல் தான் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். எம்ஜிஆர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து நடிக்கும் போதே அரசியல் பணிகளில் ஈடுபட்டவர் MGR.

தமிழக மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் MGR. சமூக நீதி கருத்துக்கள், ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் எம்ஜிஆர். அவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் என்று கூறவே முடியாது. அவர்கள் எல்லாரும் எம்ஜிஆர் பக்தர்கள் என்று கூறலாம்.

நம்பியார் தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பணியாற்றியவர். பெரும்பாலான எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். நம்பியார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் அவர்களுக்கு அடுத்ததாக போற்றப்பட்டவர் நம்பியார்.

சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நம்பியார். படங்களில்தான் வில்லனாக நடித்தவர் நம்பியார். ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஆன்மீகவாதியாகவும் டீ டோட்டலராகவும் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்கு தவறாமல் சென்று வந்தவர் நம்பியார்.

நம்பியார், எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாக நடித்திருப்பார். 1987 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் தனது 70 வது வயதில் காலமானார். அப்போது எம்ஜிஆரின் மறைவுக்கு நம்பியார் வரவில்லை. அது குறித்து அவரது ரசிகர்கள் பல கட்டு கதையை கட்டியிருந்தனர். அந்த நேரத்தில் இது பெரிதாக பேசப்பட்டது. நம்பியாருக்கும் எம் ஜி ஆர் க்கும் பகை என்று கூறினர்.

ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் எம்ஜிஆர் மறைவான போது நம்பியார் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தாராம். அதன் காரணமாகவே அவர் எம்ஜிஆர் மறைவுக்கு வரவில்லை என்று அவரே ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். இதை அறியாமல் அவரது ரசிகர்கள் பல கட்டு கதையை கட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார் நம்பியார்.

admin

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

2 மணத்தியாலங்கள் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago