#image_title
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் ரத்னம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கின்றார். மேலும் சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள்.
இப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் பட குழுவினர் பட பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரஸ்மீர் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஹரி, விஷால் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் நடிகை பிரியா பவானி சங்கர் மட்டும் பங்கேற்கவில்லை.
இது குறித்து பேசிய விஷால் நடிகை பிரியா பவானி சங்கர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் ப்ரொமோஷன்களில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் விஷயம் அது அல்ல, பிரியா பவானி சங்கருக்கும் படக்குழுவினருக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.
மேலும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவு ஓடாத காரணத்தினால் அவரை பிரமோஷனுக்கு அழைக்க வேண்டாம் என்று விஷாலே இயக்குனர் ஹரியிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. செண்டிமெண்டாக அவர் பிரமோஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம். ப்ரோமோஷன் மட்டுமில்லாமல் பட போஸ்டரில் கூட பிரியா பவானி சங்கரை தவிர்த்து இருக்கின்றார் விஷால். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் தெரிவித்திருக்கிறார்கள்.
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…