‘இறுதிச்சுற்று’ நிஜ ‘மதி’ இவர்தானா..? ‘இது என்னுடைய ரியல் ஸ்டோரி தான்’… பிரபல குத்துசண்டை வீராங்கனையின் அதிரடி பேட்டி… ஷாக்கில் ரசிகர்கள்…

By Begam on கார்த்திகை 30, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக வெளியானது இறுதிச்சுற்று திரைப்படம். பிரபல பாக்ஸிங் வீராங்கனை ரித்திகா சிங் முதன்முதலாக ஹீரோயினாக நடித்து தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்ப்பை பெற்றது. அதேபோல் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மாதவனுக்கு பெரிய வரவேற்பாக அமைந்தது இந்த படம்.

   

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்கிய சுதாவுக்கு சூர்யாவின் பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது இந்த படம்தான். இத்திரைப்படத்தில் நாசர், காளி வெங்கட், ராதாரவி, ரவீந்திர விஜய், எம் கே ரைனா, வெங்கடேசன், தேவராஜன், ராஜ் ஷர்மா என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

   

 

படம் முழுக்க முழுக்க குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவான கதை என்பதால்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்  ‘இறுதிச்சுற்று என்னுடைய கதை தான்’ என பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் பேட்டி கொடுத்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘என்னுடைய ரியல் ஸ்டோரி தான் ‘இறுதிச்சுற்று’  திரைப்படம்.  சுதா கொங்கரா, என்னை முதன்முதலில் நேரு ஸ்டேடியத்தில் தான் சந்தித்து பேசினார். கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மணி நேரம் பேசினோம். அவர் என்னுடைய வாழ்க்கை, விளையாட்டு ஆர்வம் உள்ளிட்டவற்றை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டார். பிறகு மும்பையில் இருந்து ஒரு ரைட்டர் வரை வைத்து எழுதினார்கள். அப்பொழுது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சுதா கொங்கராவிடம் போய் நான் பேசினேன். அப்பொழுது அவர் எனக்கு கமிஷனர் தெரியும் என மிரட்டினார்’என கூறியுள்ளார். இதோ அவரின் பேட்டி…

 

View this post on Instagram

 

A post shared by Bipolicxz (@bipolic.exe)