ஊத்தங்கரையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மூத்த தலைவர் தங்கபாலு, பாவெக்கல் அம்பேத்கர் நகர் பகுதிக்கு வராததால் ஆத்திரமடைந்த விசிகவினர் அவரது வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேமுதிகவைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியினருடனும் விசிகவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சியினரைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சியினருடன் சுமுகமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
