அமைச்சர் பதவி மீது தனக்கு எப்போதும் ஆசையில்லை எனத் தமிழக முதலமைச்சர் விஜய்-யிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சிக் கிழக்குத் தொகுதியில் போட்டியிடுமாறு திருமாவளவனிடம் விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதில் வெற்றி பெற்ற பிறகு அமைச்சரவையில் முக்கிய இலாகாவை ஒதுக்க முன்வந்திருப்பதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தான் அமைச்சர் பதவியை ஏற்றால், இதற்காகத்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளித்ததாக விமர்சனங்கள் எழக்கூடும் என திருமாவளவன் நினைப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து, முதலமைச்சரின் கோரிக்கைக்கு “நோ” (NO) என்று கூறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
