ஓ.பி.எஸ். அவர்கள் திமுகவில் இணைந்ததை ஏற்காத அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஓ.பி.எஸ்-ன் தீவிர ஆதரவாளர்களான திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் வார்டு உறுப்பினர் பால்ராஜ் மற்றும் ராயம்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுகுமார் உள்ளிட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தனர். அவர்களை சால்வை அணிவித்து வரவேற்ற ஈ.பி.எஸ், வரவிருக்கும் தேர்தல் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
