மனிதாபிமானம் செத்துப்போச்சா?.. நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி.. உயிருக்கு போராடும் மனிதர்கள்.. ஓடி வந்த மக்கள்.. உதவிக்கு வரல… ஆனா திருட வந்துட்டாங்க.. நெட்டிசன்களை ஆத்திரமூட்டிய வைரல் வீடியோ..!!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அந்தவா சந்திப்பு அருகே, ஞாயிற்றுக்கிழமை மதியம் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த லாரி விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், லாரியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன; பல ஆடுகள் காயமடைந்து சாலை முழுவதும் சிதறி ஓடின.

இந்த விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே அந்த இடத்தில் பெரும் மனிதாபிமானமற்ற அவலம் அரங்கேறியது. விபத்தில் காயமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த மனிதர்களுக்கு முதலுதவி செய்யவோ அல்லது அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவோ அங்கிருந்த வழிப்போக்கர்கள் முன்வரவில்லை. அதற்கு மாறாக, சாலையில் சிதறிக் கிடந்த மற்றும் லாரியில் சிக்கியிருந்த ஆடுகளைத் திருடிச் செல்வதில் அவர்கள் குறியாக இருந்தனர். காயமடைந்தவர்கள் உதவிக்காகக் காத்துக் கிடக்க, மக்கள் ஆடுகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோக்ராஜ் மற்றும் ஷாஜாத்பூர் போலீசார், காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கிரேன் மூலம் லாரி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டதுடன், எஞ்சிய விலங்குகளும் மீட்கப்பட்டன. இதுகுறித்து பேசிய காவல் அதிகாரி சந்திரபூஷன் மௌரியா, விபத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆடுகளைக் கொள்ளையடித்த நபர்களை அடையாளம் காண வைரல் வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

3,000 கி.மீ தூரம்… சீனாவில் இருந்து ஹைதராபாத்தில் ஆபரேஷன்..! இந்தியாவின் முதல் 5G ரோபோடிக் செய்த பிரம்மாண்ட மருத்துவம்.. வியக்க வைக்கும் சாதனை…!

சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…

34 seconds ago

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

17 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

20 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

21 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

36 minutes ago

BREAKING: நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி அதிரடி கைது..!!

மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…

42 minutes ago