#image_title
ராணா டக்குபதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடிக்கும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரின் தந்தை டி. சுரேஷ் பாபு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வெங்கடேஷ் மற்றும் நாகசைதன்யா ஆகியோர் ரானா டக்குபதியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பில் புகழில் இருந்த போதிலும் ராணா தனது வலது கண்ணில் பார்வை இல்லை எனவும் இடது கண் மாற்றப்பட்டது என்றும் ஓப்பனாக தெரிவித்தவர்.
2019 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ராணா டக்குபதி முதல் படத்தின் மூலமாகவே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ராணா டக்குபதி 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டு தெலுங்கில் உருவாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ருத்ரமாதேவி 2015 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தில் நடித்த பாகுபலி திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக பிரபலமான ராணா அடுத்ததாக இஞ்சி இடுப்பழகி பெங்களூரு நாட்கள் பாகுபலி 2 என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ராணா நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ராணா பாகுபலி திரைப்படத்தை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது, பாகுபலி திரைப்படத்தின் தமிழ் ஸ்கிரிப்ட் செய்யும் போது எனக்கு தமிழ் சரியாக வரவே இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ நாசர் சாரும் சத்யராஜ் சாரும் தான் எனக்கு பாடம் எடுக்கிற மாதிரி உட்கார்ந்து தமிழ் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க தான் அந்த ஸ்கிரிப்ட் முடிக்கறதுக்கு எனக்கு உதவினார்கள் என்று கூறியிருக்கிறார் ராணா டக்குபதி.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…