ஐபிஎல் மற்றும் இந்திய இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் குடும்பத்தில் இருந்து மற்றொரு கிரிக்கெட் சாதனையாளர் உருவாகியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் 10 வயது தம்பியான ஆசிர்வாத் சூர்யவன்ஷி தற்போது பீகார் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் நடந்த உள்ளூர் பயிற்சி ஆட்டம் ஒன்றில் தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமிக்காக விளையாடிய ஆசிர்வாத், 87 பந்துகளில் 20 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 103 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு 40 ஓவர் உள்ளூர் போட்டியில் ரிஷப் லெவன் அணிக்காக விளையாடி, வெறும் 119 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 168 ரன்கள் குவித்து அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின் பௌலர் என்றாலும், அவரது தம்பி ஆசிர்வாத் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் மிதவேகப் பந்துவீச்சாளர் ஆவார். வெறும் 6 மாதங்களுக்கு முன்புதான் முறையான கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கிய ஆசிர்வாத், தனது அண்ணனைப் போலவே பயமற்ற, அதிரடியான பேட்டிங் ஸ்டைலைக் கொண்டுள்ளார். பீகாரில் உள்ள தங்களது வீட்டுப் பின்புறத்தில் இருக்கும் அதே சிமெண்ட் மற்றும் மண் ஆடுகளங்களில்தான் ஆசிர்வாத்தும் தற்போது தீவிரப் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…