இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உலகில் எந்த ஒரு மூலையிலும் நடக்கக்கூடிய சிறிய விஷயங்கள் கூட வீடியோவாக வெளிவந்து விடுகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில் பெண் ஒருவர் மோட்டார் வாகனத்தில் சாலையில் வந்து கொண்டிருக்கின்றார்.
திடீரென்று நடு ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு சிறிய குழந்தையை சாலையின் நடுவே இறக்கிவிட்டு திரும்பி பார்க்காமல் அங்கிருந்து செல்கிறார். உடனே குழந்தை தரையில் தவழ்ந்து கொண்டு வரும் நிலையில் அங்கிருந்த மற்றொரு பெண் தன் வண்டியை நிறுத்தி குழந்தையை தூக்குகிறார். அந்தப் பெண்ணை நோக்கி செல்ல முயன்ற குழந்தையை காப்பாற்ற அருகில் இருந்த பொதுமக்கள் விரைவாக ஓடி வந்து உதவ முயற்சிப்பதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு தாயும் தன்னுடைய குழந்தையை இப்படி கைவிட மாட்டார், இது அலட்சியம் கிடையாது, நேரடியான வன்முறை என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிகழ்வு எப்போது எங்கு நடந்தது என்று தெளிவான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
