தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நடிகர் விஜய், அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் வைகோவின் இல்லத்தில் பணியாற்றும் பெண்கள் விஜயைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, வைகோவின் வீட்டில் பணியாற்றும் பெண் ஒருவர் முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்தார். பதிலுக்கு விஜய்யும் அந்தப் பெண்ணிற்குத் திருஷ்டி கழித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விஜய்யின் இந்த எளிமையான மற்றும் அன்பான அணுகுமுறை சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, மற்றொரு பெண் திடீரென முதலமைச்சர் விஜய்யின் காலில் விழுந்து வணங்கினார். எதிர்பாராத இந்தச் செயலால் சற்று திகைத்துப் போன விஜய், உடனடியாக அப்பெண்ணைத் தடுத்து நிறுத்தி அவரைத் தூக்கி விட்டார். இந்தப் புகைப் படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
