BREAKING: விஜய் விடுத்த எச்சரிக்கை… அதிர்ச்சியில் தவெகவினர்..!!

By Soundarya on வைகாசி 22, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரான விஜய்யின் உத்தரவின்படி, கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தவெகவினர் சிலர் திடீரென ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்படக் கூடாது என்பதற்காக இந்த அதிரடி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அரசு சார்ந்த விவகாரங்களிலோ அல்லது அரசு அலுவலகங்களிலோ தன்னிச்சையாகத் தலையிடவோ, ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தொண்டர்கள் தங்களது எல்லைகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், முதலமைச்சரின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு தேவையற்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும் இந்த எச்சரிக்கையில் மிகத் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.