BREAKING: கட்சி இரண்டாக உடைந்தது…. 20 MP-க்களுடன் ரகசிய ஸ்கெட்ச் போட்ட ‘அந்த’ தலைவர்…. மம்தாவின் அடுத்த மூவ்…!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

மேற்கு வங்க சட்டப்பேரவையைத் தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்ற லோக்சபாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான பிளவைச் சந்தித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள ரிதப்ரதா பானர்ஜிக்கு, அக்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) தங்களது ஆதரவை வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் அரசியல் திருப்பத்தைத் தொடர்ந்து, தற்போதைய லோக்சபா குழுத் தலைவர் பதவியிலிருந்து அபிஷேக் பானர்ஜியை அதிரடியாக நீக்குவதற்கான தீவிர முயற்சிகள் பின்னணியில் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் 58 சட்டப்பேரவை உறுப்பினர்கள் (MLA) ரிதப்ரதா பானர்ஜியின் பக்கம் அணிவகுத்து நிற்கும் நிலையில், தற்போது லோக்சபாவிலும் இந்த பிளவு நீடித்திருப்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கடுமையான அரசியல் நெருக்கடியையும் சவாலையும் உருவாக்கியுள்ளது.