“ரூ.2000 கொடுங்க அம்மா”… பணம் கொடுக்க மறுத்த தாய்… மகன் எடுத்த விபரீதம் முடிவு… பொறியியல் மாணவனின் கனவு துப்பட்டாவால் முடிந்த சோகம்… பீகாரில் பயங்கர சம்பவம்..!!!

By Muthu Mani on சித்திரை 24, 2026

Spread the love

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஸ்தியில், வெறும் 2,000 ரூபாய் பணத்திற்காகப் பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்கிசராய் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த 30 வயதான குமார் கௌரவ், தனது தாயிடம் 2,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். முந்தைய நாள் தான் பணம் கொடுத்ததாகக் கூறி தாய் மறுக்கவே, ஆத்திரமடைந்த மாணவர் வீட்டின் நான்காவது மாடிக்குச் சென்று தனது சகோதரியின் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தாமதமாகியும் மகன் கீழே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குமார் கௌரவ் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தற்கொலைக்கு முன்பாக தனது பிடிவாதத்தை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை உதைத்துத் தள்ளிவிட்டு மாணவர் மேலே சென்றதாகத் தந்தை யோகேந்திர பிரசாத் சிங் உருக்கத்துடன் தெரிவித்தார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான யோகேந்திர பிரசாத்தின் மூன்று பிள்ளைகளில் கௌரவ் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆதர்ஷ் ஜமால்பூர் காவல்துறையினர், மாணவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரு ஆசிரியையின் மகனாகவும், படித்த பொறியியல் மாணவராகவும் இருந்தும், ஒரு சிறிய பணத் தகராறுக்காக இத்தகைய விபரீத முடிவை அவர் எடுத்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.