தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் உள்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு விழாவை நாளை மறுதினம், அதாவது மே 7-ம் தேதி, சென்னை நேரு மைதானத்தில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
