“எனக்கு நீதான் முக்கியம்”… பெற்ற பிள்ளைகளா? கள்ளக்காதலனா?… மதுரையை அதிரவைத்த 21 வயது இளம்பெண்ணின் ‘திக் திக்’ காதல் கதை.. அதிர்ச்சி பின்னணி..!!!

By Rajeshwari on பங்குனி 12, 2026

Spread the love

சென்னை குன்றத்தூர் அபிராமி சம்பவத்தைப் போன்று மதுரையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 21 வயதான தனலட்சுமி என்ற இளம்பெண், வெங்காய மண்டி ஒன்றில் வேலை பார்த்து வந்த லோகேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மேலும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது காதலுக்காகவும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும் திட்டமிட்ட தனலட்சுமி, தனது பெற்ற பிள்ளைகளையே கைவிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த விவகாரத்தில், தனது காதலுக்கு தடையாக இருந்ததாகக் கருதி தன் பிள்ளைகளைக் கூட பொருட்படுத்தாமல் அவர் எடுத்த இந்த விபரீத முடிவு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. லோகேஷுடன் தலைமறைவாக இருந்த தனலட்சுமியை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடித்து விசாரித்தனர்.

   

இந்நிலையில் தர்மம், பாசம் என அனைத்தையும் துறந்து கள்ளக்காதல் மோகத்தால் ஒரு தாய் தனது குழந்தைகளைத் தவிக்கவிட்டுச் சென்ற இந்த நிகழ்வு, குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போலவே பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.