திக் திக் நிமிடங்கள்..! பள்ளிக்கு மகளை அழைத்து சென்ற தந்தை… திடீரென குறுக்கே வந்த புலி… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

By Soundarya on சித்திரை 18, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராப்பூர் வனப்பகுதிக்கு அருகே தந்தை ஒருவரும் அவரது மகளும் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு புலி குறுக்கே வந்துள்ளது. சாலையின் ஓரத்தில் புலி பதுங்கியிருப்பதைச் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென அது சாலையை நோக்கி வரத் தொடங்கியதைக் கண்டு இருவரும் நிலைகுலைந்து போயினர்.

புலியைக் கண்டதும் அச்சத்தில் உறைந்துபோன தந்தை, தனது மகளின் பாதுகாப்பைக் கருதி உரக்கச் சத்தமிடத் தொடங்கினார். காட்டுயிர்களை அச்சுறுத்தி விரட்டுவதற்காகவும், உதவி கோரியும் அவர் எழுப்பிய பெரும் சத்தம் புலியின் கவனத்தைத் திசைதிருப்பியது. இதனால் புலி அவர்களைத் தாக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே ஓடி மறைந்தது.

   

   

இந்தச் பரபரப்பான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளது. உயிருக்குப் போராடிய நிலையில், தந்தையின் சமயோசிதமான முடிவால் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, தந்தையின் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.