நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆரம்பம் முதலே தனது தம்பியாகப் பாவித்து மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகிறார். தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வருகையை வாழ்த்தியுள்ள அவர், அவரிடம் அரசியல் பேசுவதைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும், விஜய்க்கு ஒரு முக்கியமான அறிவுரையையும் குஷ்பூ வழங்கியுள்ளார். பரப்புரைக்கு வரும் பெரும் மக்கள் கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றும், தன்னைத் தேடி வரும் கூட்டத்தை மட்டும் நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குஷ்பூவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சி, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரும் விஜய்யை விமர்சிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே சமயம், பாஜகவின் மற்ற நிர்வாகிகள் சிலர் விஜய்யை விமர்சித்தாலும், திமுக அளவிற்கு அவர் மீது கடுமையான தாக்குதல்களை அவர்கள் தொடுப்பதில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. இது ஒருபுறமிருக்க, விஜய்யும் தனது பரப்புரைகளில் பாஜகவை விட திமுகவை நோக்கியே அதிக விமர்சனக் கணைகளை வீசி வருகிறார்.
இந்தச் சூழல்தான் தற்போது பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. விஜய் பாஜகவின் நிழலாகச் செயல்படுவதாகவும், அதனால்தான் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை அவர் விமர்சிப்பதில்லை என்றும் திமுக தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் ஒருபடி மேலே சென்று, திமுகவின் சிறுபான்மையின வாக்குகளைப் பிரிப்பதற்காகவே பாஜக விஜய்யைத் தனித்து நிற்க வைத்துள்ளது எனப் பகிரங்கமாகச் சாடியுள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் பாஜகவினர், விஜய்யால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், அவர் திருமாவளவன் போன்றவர்களின் வாக்குகளைத்தான் பிரிப்பார் என்றும் கூறி வருகின்றனர்.
களத்தில் தங்களுக்குப் போட்டியாக இருப்பது திமுக மட்டுமே என்பதால், அவர்களை மட்டும் விமர்சிப்பதாக தவெக தரப்பு விளக்கமளித்தாலும், மக்கள் மத்தியில் எழும் சந்தேகங்களுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தனக்கும் பாஜகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தனது பரப்புரைகள் மூலம் அவர் நிரூபிக்காவிட்டால், அது தேர்தலின் போது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். எனவே, மக்கள் மத்தியில் நிலவும் இந்த பிம்பத்தை உடைக்க விஜய் ஏதேனும் அதிரடி முடிவை எடுப்பாரா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…
வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…