உத்தரப்பிரதேசத்தின் நூஹ் (Nuh) மாவட்டம் பிங்வான் பகுதியில், தாயின் தகாத உறவை அறிந்த 20 வயது மகன், அவரைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தாய் கள்ளக்காதலனுடன் இருப்பதை நேரில் கண்ட அந்த இளைஞர், ஆத்திரத்தில் தாயின் கை மற்றும் கால்களில் கத்தியால் குத்திவிட்டு, அவரைத் தப்பிக்க முடியாமல் கட்டிலில் கட்டிப்போட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய அந்த இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்ப மானம் கருதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
