சீனாவில் பதின்ம வயதுச் சிறுவன் ஒருவன், வீடியோ கேம்களை வாங்குவதற்காகத் தனது தாயின் வங்கிக் அட்டையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளான். அதற்குத் தாய் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன், பொது இடம் என்றும் பாராமல் தனது தாயைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினான். இந்தத் துணிகரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
A Chinese teenager brutally attacked his mother in public because she wouldn’t let him buy video games with her bank card. Everyone was shocked at his audacity. Many tried to intervene, but he seemed out of control, relentlessly chasing and hitting her. pic.twitter.com/iy4b0BCgN3
— GPX (@GPX_Press) January 31, 2026
கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சிறுவன், இடைவிடாமல் தனது தாயைத் துரத்திச் சென்று தாக்கியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அவனைத் தடுக்க முயன்றனர். நவீன காலத்தில் வீடியோ கேம் போன்ற டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகும் சிறுவர்களிடையே ஏற்படும் நடத்தையில் இத்தகைய வன்முறைப் போக்கு அதிகரித்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது
