மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கணவன்மார்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் விசித்திரமான கோரிக்கை நீதிமன்றத்தையே அதிரவைத்துள்ளது. தனது மனைவியையும் மகளையும் மச்சான் கடத்திவிட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட பெண் தான் கடத்தப்படவில்லை என்றும் விருப்பத்துடனேயே வாழ்வதாகவும் தெரிவித்தார்.
இதில் உச்சகட்ட திருப்பமாக, மச்சானின் மனைவியும் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவரின் தங்கையுமான பெண், “அவர் என் அக்காவுடனேயே வாழட்டும்; எனக்கு என் அக்காவின் கணவருடன் வாழவே விருப்பம்” எனத் தெரிவித்தார். ஏதோ ஒரு பொருளை மாற்றிக்கொள்வது போலத் தங்களது கணவன்மார்களை மாற்றிக்கொள்ளச் சகோதரிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கையைக் கேட்டு நீதிபதியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
