நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ நாளை (ஜனவரி 9) வெளியாகவிருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் பின்டைவு ஏற்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
படம் தள்ளிப்போன சூழலில், இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவின் வீடியோவை ‘ராவண மவன்டா’ என்ற ஹேஷ்டேக்குடன் அவர் பதிவிட்டுள்ள நிலையில், அது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…