டெல்லியின் புகழ்பெற்ற ஜமா மஸ்ஜித் பகுதியில் உள்ள நெரிசலான சந்தையில், பெண் ஒருவரிடம் திருட முயன்ற நபரை இளைஞர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்டத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் பையிலிருந்து திருட முயன்றபோது, அங்கிருந்த நபர் அதைத் தனது செல்போனில் படம்பிடித்துக் கொண்டே அந்த நபரைத் தடுத்து நிறுத்தினார்.
மேலும் “நான் முழுவதையும் வீடியோ எடுத்துள்ளேன்” என்று அவர் உரத்த குரலில் எச்சரித்ததைக் கேட்டு, சுற்றியிருந்த மக்கள் அங்கு திரண்டனர். இந்தத் துணிச்சலான செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் அந்த இளைஞரின் விழிப்புணர்வையும் தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.
“>
இந்நிலையில் பொதுவாகப் பொது இடங்களில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் நடக்கும்போது பலரும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலையில், இவர் ஆதாரத்துடன் திருடனைப் பிடித்தது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில், பண்டிகைக் காலங்களில் சந்தை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது பொதுமக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…