அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் கொடுத்த ‘பவர்’ செக்…. 2026-ல் மெகா ட்விஸ்ட்?… பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!

By Nanthini on தை 21, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் மற்றும் மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள், வெறும் இடப் பங்கீடு மட்டும் போதாது, வரும் தேர்தலில் “ஆட்சியில் பங்கு”  வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் விமர்சனம் செய்ததும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்  காங்கிரஸ் இணைய வாய்ப்புள்ளதாக எழுந்த வதந்திகளும் திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்றும், நீண்டகாலமாக ஒற்றைக் கட்சி ஆட்சியே நடைபெற்று வருவதால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் திமுக தரப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ராகுல் காந்தி மற்றும்  ஸ்டாலின் இடையே நல்லுறவு இருந்தபோதிலும், கீழ்மட்டத் தலைவர்களின் இத்தகைய பேச்சுகள் கூட்டணியின் ஒற்றுமையைக் குலைப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோர் “காங்கிரஸ் திமுகவுடன்தான் இருக்கிறது” என்று கூறி நிலைமையைச் சரிசெய்ய முயன்று வருகின்றனர்.

   
இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ்  தலைவர்களிடம் தலைமை கருத்து கேட்டுள்ளதாக கூறிய அவர், அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளதால் அதனடிப்படையில் தலைமை முடிவெடுக்கும் என்றார். இவருடைய இந்த பதில் திமுகவிற்கு சற்று அதிர்ச்சியளித்திருப்பதாக பேசப்படுகிறது.