ரவுடி போல நடந்து கொண்ட காவலர்.. பெண்ணின் முகத்தில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிய அதிர்ச்சி… பின்னணி என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love

அகமதாபாத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் பெண்ணிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு குடிமகளாக அந்தச் சகோதரி அடையாள அட்டையைக் கேட்டது சட்டப்படியான உரிமையே. தவறுதலாக அந்த அட்டை கையை நழுவி கீழே விழுந்ததற்காக, ஒரு பெண்ணின் முகம் சிதையும் அளவுக்குத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

பாதுகாக்க வேண்டிய காவலர்களே இப்படி ரவுடிகளைப் போல நடந்துகொள்வது சட்டத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பெருமை பேசும் குஜராத் அரசாங்கம், தனது காவல்துறை அதிகாரியின் இந்த அநாகரிகமான செயலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?