வாட்டிகன் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனித தலங்களில் ஒன்றான செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் உள்ளே உள்ள கன்ஃபெஷன் பலிபீடத்தில் ஒருவர் சிறுநீர் கழித்ததாக அதிர்ச்சியூட்டும் செயல் ஒன்று கேமராவில் பதிவாகியுள்ளது மேலும், அந்த நபர் தனது பேண்ட்டை கழற்றி, வழிபாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட கூட்டத்தின் முன்னிலையில் வெட்கக்கேடான முறையில் இந்தச் செயலைச் செய்ததை வீடியோ காட்டுகிறது. சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்புப் படையினரும், வாடிகன் காவல்துறை அதிகாரிகளும் அவரை சில நிமிடங்களில் அவரைக் கைது செய்தனர்.
VATICAN CITY—CONFIRMED that a man desecrated the Papal Altar of St Peter’s Basilica, at 9:30AM yesterday morning, by urinating on it in the presence of hundreds of pilgrims.
Holy Mass was being celebrated, at the time, at the Altar of the Chair.
— Bree A Dail (@breeadail) October 11, 2025
காலை 9 மணியளவில் காலை திருப்பலியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது, நூற்றுக்கணக்கான வழிபாட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் திகைக்க வைத்தது. இத்தாலிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளின்படி, அடையாளம் தெரியாத நபர் பாரம்பரியமாக போப் திருப்பலியைக் கொண்டாடப் பயன்படுத்தும் புனித பலிபீடத்திற்குச் செல்லும் படிகளில் ஏறி, தனது பேண்ட்டைக் கீழே இறக்கி, கூட்டத்தின் முழுப் பார்வையில் பளிங்கு தரையில் சிறுநீர் கழித்தார். மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் அந்த நபர், வத்திக்கான் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இத்தாலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
