சிவகங்கை, காரைக்குடியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வசித்திருக்கும் வீட்டின் எதிரே கோகுல் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புதுத் தம்பதிகள் இருவரும் வீட்டில் அறையில் தனிமையில் இருந்ததை அறையின் ஜன்னல் தொறந்து இருந்ததால். எதிர் வீட்டில் இருந்த கோகுல் சந்தோஷ் என்பவர் அவரது வீட்டின் மாடியில் இருந்து வீடியோ எடுத்துள்ளார். சந்தோஷ் அவரது நண்பரான சித்த மருத்துவர் ஹரிஹரசுதனும் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். பின்பு இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று அப்பெண்ணை மிரட்டி பணம் பறிக்கலாம் மற்றும் உல்லாசத்தை அனுபவிக்கலாம் என்று சித்த மருத்துவர் ஹரிஹரசுதன் கூறியுள்ளார்.
அப்பெண்ணிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு, போலிஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர் .பின்பு உன்னுடைய ஆபாச வீடியோ எங்களிடம் உள்ளது நாங்கள் கூறுகிற அனைத்தையும் நீ செய்ய வேண்டும் என்று சில கூட்டாளிகளை இணைத்துக் கொண்டு மிரட்டி உள்ளனர். அதனால் அந்தப் பெண்ணும் அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்றுள்ளார். கணவன் மனைவி இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி உள்ளனர். அப்பெண்ணோ கத்தி கதறி அழுதுள்ளார், வீடியோவை டெலிட் செய்யுங்கள் என்று கதறி உள்ளார்.
புதுமணத் தம்பதிகள் இருவரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் களத்தில் இறங்கிய போலீசார் சித்த மருத்துவரையும் , கோகுல் சந்தோஷ் மற்றும் கூட்டாளியான முத்துப்பாண்டி மற்றும் 17 வயது சிறுவனையும் அதிரடியாக கைதுச் செய்துள்ளனர். அவர்களை விசாரித்ததில் அந்த வீடியோ வாட்ஸப் குரூப்பில் பகிரப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நாலு கீழ்த்தனமான மனிதர்களின் அலைபேசியை பறிமுதல் செய்து சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றனர்.
