ஜப்பானைச் சேர்ந்த ‘டோகோ’ என்ற நபர், சிறுவயது முதல் ஒரு நாயாக வாழ வேண்டும் என்ற தனது வித்தியாசமான கனவை நனவாக்கியுள்ளார். இதற்காக அவர் என்ற பிரபல திரைப்பட சிறப்பு விளைவுகள் நிறுவனத்தை அணுகி, ‘ரஃப் கோலி’ என்ற நாய் இனத்தைப் போன்று தத்ரூபமாக இருக்கும் உடடையை வடிவமைத்துள்ளார். சுமார் 2 மில்லியன் யென் செலவில் 40 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த ஆடையில், அவர் அசல் நாயைப் போலவே தோற்றமளிக்கிறார்.
தனது உருவ மாற்றத்தை வீடியோவாகப் பதிவு செய்து ‘I want to be an animal’ என்ற யூடியூப் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருகிறார். இந்த உடையில் அவர் வீதிகளில் உலா வருவது, பூங்காவில் மனிதர்கள் மற்றும் பிற செல்லப் பிராணிகளுடன் பாய்ந்து விளையாடுவது, நாயைப் போல உருண்டு பிரள்வது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அவரது இந்த விசித்திரமான செயல்பாட்டைக் கண்டு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினர்.
சமூகத்தின் விமர்சனங்களுக்கும் நண்பர்களின் கேலிகளுக்கும் பயந்து தனது உண்மையான முகத்தையும் அடையாளத்தையும் மறைத்து வைத்திருக்கும் டோகோ, மனிதராக வாழ்வதை விட விலங்காக மாறுவதையே அதிகம் விரும்புவதாகக் கூறியுள்ளார். தனது கனவை நிறைவேற்ற இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு, நாய் உடையில் வாழும் இவரது இந்த மாற்றம் சமூக வலைத்தளங்களில் மனித உளவியல் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்த பல புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
