காரில் வந்த ஒருவர் விலை கொடுத்து வாங்கிய பறவைகளை காற்றில் பறக்கவிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
காட்டில் சுதந்திரமாக சுற்றி தெரியும் பறவைகளை அழகுக்காக நாம் கூண்டுக்குள் வைத்து வளர்க்கிறோம். அதிலும் சில பறவைகள் அழகுக்காக வேண்டி அதிகம் வேட்டையாடப்படுகின்றது. அவ்வாறு காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு வரும் பறவைகள் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்பட்டு பின்னர், அவை விற்பனைக்கு வெளியில் வருகின்றன.
சிலர் பறவைகள் மீதுள்ள பாசத்தால், அன்பால் அவற்றை வாங்கி அவற்றுடன் விளையாடுவதும் கொஞ்சுவதும் அவற்றை வீட்டிற்கு கொண்டு சென்று கூண்டுக்குள் வைத்து வளர்ப்பதும் என மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால் பறவைகளுக்கு சுதந்திரமாக சுற்றித் திரிவதே பிடிக்கும்.
தற்பொழுது இங்கு ஒரு நபர் பறவைகளைப் பிடித்து கூண்டிற்குள் அடைத்து விற்பனைக்கு கொண்டு வருகிறார். சாலையில் காரில் வந்த ஒருவர் அப்பறவைகளை அவரிடம் இருந்து ஒவ்வொன்றாக காசு கொடுத்து வாங்கி காற்றில் பறக்க விடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள் ‘கடவுள் உருவத்தில் மனிதர்’ என்றும், ‘மனிதநேயமிக்க மனிதர்’ என்றும், ‘இது போன்ற எண்ணம் தான் மனிதநேயம்’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ உங்களுக்காக….
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…