தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு, டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளில் முதல் வெற்றி கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோதமாக வசூலிக்கப்படும் மாமூல் தொகை கடந்த ஒரு மாதமாக வசூலிக்கப்படவில்லை என டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாதத்திற்கு சுமார் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டும் பெரிய டாஸ்மாக் கடைகளில் இருந்து, அதிகாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை மாமூல் கொடுக்கப்படுவதாகப் புகார்கள் நீண்டநாட்களாக இருந்து வந்தன. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் இப்பணம் எங்கும் கொடுக்கப்படவில்லை என்று பணியாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடுகளை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் விஜய், கோவில்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த சுமார் 717 அரசு மதுபானக் கடைகளை மூட ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கொள்முதல் நிலை முதல் சில்லறை விற்பனை வரை ஒட்டுமொத்த டாஸ்மாக் செயல்பாடுகளையும் முழுமையாகக் கண்காணித்து நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய இந்த மாமூல் ஒழிப்பு நடவடிக்கை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சகத்தின் தீவிர கண்காணிப்பால் சாத்தியமாகியுள்ளதாகவும், இது புதிய அரசுக்குக் கிடைத்த முக்கிய தொடக்க வெற்றியாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் ஜூலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள செய்தி குடும்ப அட்டைதாரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரு.நாகராஜன்,…
தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) முத்தரசன் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்…
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…