தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் விசுவாசிகள் அடுத்தடுத்து அ.தி.மு.க.வில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது அழகிரிக்கு வலதுகரமாகத் திகழ்ந்த அழகிரி பேரவையின் ஈரோடு மாவட்டத் தலைவர் சுகுணா சத்தியனும் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
பல ஆண்டுகளாக மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தனது ஆதரவாளர்களுடன் விரைவில் சென்னை சென்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டத்தை முறைப்படி உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதால், ஈரோடு மாவட்ட அரசியலிலும் அ.தி.மு.க. தரப்பு புது உற்சாகம் அடைந்துள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…