தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் விசுவாசிகள் அடுத்தடுத்து அ.தி.மு.க.வில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது அழகிரிக்கு வலதுகரமாகத் திகழ்ந்த அழகிரி பேரவையின் ஈரோடு மாவட்டத் தலைவர் சுகுணா சத்தியனும் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

பல ஆண்டுகளாக மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தனது ஆதரவாளர்களுடன் விரைவில் சென்னை சென்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டத்தை முறைப்படி உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதால், ஈரோடு மாவட்ட அரசியலிலும் அ.தி.மு.க. தரப்பு புது உற்சாகம் அடைந்துள்ளது.
