அமெரிக்க அதிபர் டிரம்பின் சீனா சுற்றுப்பயணத்தின் போது, அவருடன் உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கும் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தார். அங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு முக்கிய விருந்து நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கலந்துகொண்டார். அப்போது மஸ்க்கிற்குப் பின்னால் சாதாரண பணிப்பெண் (பணியாளர்) போல ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார். தற்போது அந்தப் பெண் சாதாரண ஹோட்டல் ஊழியர் அல்ல என்றும், அவர் சீன ராணுவத்தின் முக்கிய அதிகாரி என்றும் எழுந்துள்ள ஊகங்கள் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அவருக்குப் பின்னால் நின்ற அந்தப் பெண், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) ஒரு பட்டாலியன் கமாண்டரான மேஜர் ‘செங் செங்’ (Cheng Cheng) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சீன ராணுவத்தின் செயல்பாட்டு கையேடுகள் மற்றும் நடைமுறைகளை எழுதுவதில் மிக முக்கியப் பங்கு வகித்த உயர்பதவி அதிகாரி ஆவார். மேஜர் செங் செங் ராணுவ சீருடையில் இருக்கும் பழைய புகைப்படங்களையும், இந்த விருந்து நிகழ்ச்சியில் பணிப்பெண் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலர் இந்த உளவு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.
மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் எலான் மஸ்க் போன்ற முன்னணி தொழிலதிபர்களைக் கண்காணித்து, தங்களது வலைக்குள் வீழ்த்துவதற்காக சீனா இது போன்ற உளவு உத்திகளைக் கையாள்வதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ‘பாங் பாங்’ என்ற சீனப் பெண், கலிபோர்னியாவைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளை ‘ஹனிட்ராப்’ (Honeytrap) செய்து ரகசிய தகவல்களைப் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கைக் கண்காணிக்க சீன ராணுவ மேஜரே பணிப்பெண்ணாக மாறியிருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…
திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம், காவல் சார்பு ஆய்வாளர் ஒருவரே அநாகரிகமான முறையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மீராப்பூர் பகுதியில், முறையான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஒரு சிறுவன்…
தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து…
தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…