சீனாவிலிருந்து பரவி வரும் ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், விமான நிலைய ஓடுபாதையில் (Runway) சாதாரண உடையில் இருக்கும் ஒரு நபர், பணியை முடித்துவிட்டு வரும் விமானப் பணிப்பெண் (Air Hostess) ஒருவரிடம் பூங்கொத்து கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால், அந்த நபர் ஏழ்மையானவர் எனத் தவறாகக் கருதிய அந்தப் பணிப்பெண், அவரது தோற்றத்தை ஏளனம் செய்து, காதலை மிக மோசமாக நிராகரிக்கிறார்.
காதல் நிராகரிக்கப்பட்ட அடுத்த சில வினாடிகளில் நடந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் திகைக்க வைத்தது. அந்த நபரை அழைத்துச் செல்ல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த ‘பென்ட்லி’ (Bentley) கார் ஒன்று அங்கு வந்து நின்றது. சீருடை அணிந்த ஓட்டுநர் காரிலிருந்து இறங்கி, குடை பிடித்து அந்த நபருக்காகக் கதவைத் திறந்துவிட, அவர் எந்த சலனமும் இன்றி காரில் ஏறிச் செல்கிறார். தான் நிராகரித்தது ஒரு சாதாரண நபரை அல்ல, ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரரை என்பதை உணர்ந்த அந்தப் பணிப்பெண், அங்கேயே மண்டியிட்டு அழுது புலம்புகிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இதுதான் உடனடி கர்மாவின் (Instant Karma) சக்தி” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இது ஒரு விழிப்புணர்வுக்கான நாடகமாக இருக்கலாம் என்று கூறினாலும், “உடையைப் பார்த்து ஒருவரின் தகுதியை எடை போடக்கூடாது” என்ற நல்ல கருத்தை இது சொல்வதாகப் பாராட்டி வருகின்றனர். பணத்திற்காகக் காதலைத் தரம் பிரிக்கும் மனிதர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் என்று இந்த வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…