விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், தனது விலை உயர்ந்த சொகுசு காருக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற இடத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கில் அவர் டீசல் போட்டபோது, அதில் அதிகளவு தண்ணீர் கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது.
எரிபொருளில் தண்ணீர் கலந்திருப்பதை உறுதி செய்த மாகாபா, இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆதார் வீடியோவை வெளியிட்டு மிகக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். கலப்பட எரிபொருளால் காரின் இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அதனைச் சரிசெய்யப் பல லட்ச ரூபாய் செலவாகும் எனத் தெரிகிறது.
இது குறித்து எரிபொருள் நிலையத்திடம் புகார் அளித்தபோது, அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் பேரம் பேச முயன்றதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பழுதுபார்ப்புச் செலவுக்கான ரசீதுகளையும் அவர் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், வாகன ஓட்டிகளிடையே கலப்பட டீசல் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…
பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…