டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர் கிராமத்திற்கே சென்று நியாயம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் டெல்லியில் உள்ள மால் ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு தன்னுடன் பணியாற்றிய பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் நீண்ட காலம் கணவன்-மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அந்தப் பெண் இரண்டு முறை கர்ப்பமடைந்து, வாலிபரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த வாலிபருக்கு வரும் மே 2-ம் தேதி அவரது சொந்த ஊரில் திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த காதலி, அதிர்ச்சியடைந்து நேராக வாலிபரின் கிராமத்திற்குச் சென்றார். அங்கு அந்தப் பெண் வருவதை அறிந்த வாலிபர் தலைமறைவானார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமண ஆசை காட்டி தன்னுடன் பல ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, இப்போது ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயல்வதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…
தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை 2026-ஆம் ஆண்டு தேர்தல் பதிவு செய்துள்ளது.…
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே உள்ள திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…