2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) அஞ்சலகச் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் அப்படியே தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பணவீக்கம் மற்றும் சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின்படி, சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீதமும், பி.பி.எஃப் (PPF) திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டியும் தொடர்ந்து வழங்கப்படும். இது ஏழாவது முறையாக வட்டி விகிதம் மாற்றப்படாமல் நீட்டிக்கப்படுவது முதலீட்டாளர்களுக்கு ஒரு நிலையான வருமான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
குறிப்பாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதேபோல கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற திட்டங்களுக்கான வட்டியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கிகளை விடச் சற்று கூடுதல் வட்டியும், அரசின் முழுப்பாதுகாப்பும் இருப்பதால், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் நிதித் தேவைகளுக்கு அஞ்சலகச் சேமிப்பைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் பயன்படுத்த இந்த அறிவிப்பு வழிவகை செய்துள்ளது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…