அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் ஒருமுறை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில் எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.
இது குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தனது தலையீடு மட்டும் இல்லையென்றால் சுமார் 35 மில்லியன் மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதே கருத்தை டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மேலும் தற்போது வரை சுமார் 100 முறை அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ள நிலையில், இந்தியத் தரப்பு இதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தப் போர் தவிர காசா போர், இஸ்ரேல்-ஈரான் மோதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளையும் தான் தீர்த்து வைத்ததாக டிரம்ப் தனது உரையில் பட்டியலிட்டார்.
இந்நிலையில் டிரம்பின் இந்தப் பேச்சுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் சபையிலேயே குறுக்கீடு செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், அவர்கள் “மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்” என்று விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…
அண்ணா பல்கலைக்கழக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த திமுக அனுதாபி ஞானசேகரன், திடீரென அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது…
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு விடுத்த "திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்" என்ற எச்சரிக்கை உலக…