Connect with us

நடு இரவில் சுற்றி வளைத்த கொள்ளையர்கள்.. தந்திரத்தால் அவர்களையே தனக்கு பாதுகாப்பு அளிக்க வைத்த சாவித்திரி..!!

CINEMA

நடு இரவில் சுற்றி வளைத்த கொள்ளையர்கள்.. தந்திரத்தால் அவர்களையே தனக்கு பாதுகாப்பு அளிக்க வைத்த சாவித்திரி..!!

 

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சாவித்திரி. இவர் முதன் முதலில் பாதாள பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார். பிறகு கல்யாணம் பண்ணிப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த சாவித்திரி ஜெமினிகணேசனுடன் காதலில் விழுந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

   

திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும் அந்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் தயாரிப்பாளராக மாறினார். அதன்படி 1971 ஆம் ஆண்டு ப்ராப்தம் என்ற திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியடைந்ததால் இதுவே அவரது கடைசி படமாக அமைந்தது. இந்த நிலையில் நடு இரவில் கொள்ளையர்களை சாவித்திரி சாமர்த்தியமாக சமாளித்த ஒரு சம்பவத்தை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதாவது மைசூரில் படப்பிடிப்புக்காக நான் மற்றும் நடிகைகள் சிலரை அழைத்துக் கொண்டு சாவித்திரி அக்கா காரை ஓட்டிக்கொண்டு சென்றார். ஸ்ரீஹரி செல்லும்போது நடுரோட்டில் யானைக் கூட்டம் வந்ததால் காரை பின்னோக்கி எடுத்துச் சொல்லும் போது பத்து கொள்ளையர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் எந்தவித பயமும் இல்லாமல் காரை விட்டு இறங்கி சென்ற சாவித்திரி அக்கா, நான் ஒரு நடிகை உங்களுக்கு தெரியாதா? உங்களை மகிழ்விக்க தான் நடிப்பதற்காக நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் தான் உள்ளது வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதன் பிறகு கொள்ளையர்கள் அனைவரும் அவரிடம் சகஜமாக பேசிவிட்டு அந்த காட்டை கடந்து செல்லும் வரை யானைகளை விரட்டி விட்டு எங்களுடன் பாதுகாப்பாக வந்தனர் என்று சாவித்திரியின் சாமர்த்தியத்தை குட்டி பத்மினி பகிர்ந்து உள்ளார்.

author avatar
Nanthini
Continue Reading
To Top